சினிமா
காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? - அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியானது
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். படப்பிடிப்பு மே மாதம் தொடங்குவதாக இருந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பை திட்டமிட்டபடி தொடங்க முடியாமல் போனது.
இந்நிலையில், இதன் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பதுபற்றி அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர தங்கள் நிறுவனம் தயாரித்துவரும் படங்கள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்தும் அவர் பதிவிட்டுள்ளார்.
Updates on On-Going projects of #7ScreenStudio:- #Thalapathy's #Master-In Post Production#ChiyaanVikram's #Cobra-Completed 90 days of shoot,25% to shoot#MakkalSelvan's#TughlaqDarbar-Completed 35 days of shoot-40 days to shoot
— Seven Screen Studio (@7screenstudio) May 22, 2020
& #KaathuvaakulaRenduKaadhal - Rolling frm Aug pic.twitter.com/9fCs0LihWN