சினிமா
ஜோதிகா

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நானா? - ஜோதிகா விளக்கம்

Published On 2020-05-21 07:53 GMT   |   Update On 2020-05-21 07:53 GMT
சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜோதிகா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கி இருந்தார். தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னனுக்கும், சந்திரமுகிக்கும் நடக்கும் மோதலை படமாக்குவதாகவும், வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்றும் பி.வாசு தெரிவித்துள்ளார். 



மேலும் இப்படத்தில் ஜோதிகாவை இரட்டை வேடத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதுகுறித்து ஜோதிகா சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: "சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க, யாரும் என்னை அணுகவில்லை. அந்த கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் அவர்களுக்கு என் வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.
Tags:    

Similar News