சினிமா
போனிகபூர்

தனிமைப்படுத்திக்கொண்டது ஏன்... கொரோனா பாதிப்பா? - போனிகபூர் விளக்கம்

Published On 2020-05-21 02:10 GMT   |   Update On 2020-05-21 02:10 GMT
வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் போனிகபூர். இவர் தமிழில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்தார். தற்போது அவர் நடிக்கும் ‘வலிமை’ படத்தையும் தயாரிக்கிறார். போனிகபூருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஜான்வி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். போனிகபூரின் இல்லம் மும்பை அந்தேரியில் உள்ள லோகந்த் வாலா பகுதியில் அமைந்துள்ளது. அங்கு அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் போனிகபூர் வீட்டில் வேலை பார்த்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. போனிகபூருக்கும் நோய் பரவி இருக்கலாம் என்று தகவல் பரவியது.



இதுகுறித்து விளக்கமளித்து போனிகபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது வீட்டு பணியாளருக்கு கொரோனா உறுதியானது உண்மைதான். அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனக்கும், மகள்களுக்கும் கொரோனா அறிகுறி இல்லை. நலமாக இருக்கிறோம். இருப்பினும் நாங்கள் எங்களை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்”.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News