சினிமா
அமிதாப் பச்சன்

துப்புரவு பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்

Published On 2020-05-19 09:44 GMT   |   Update On 2020-05-19 09:44 GMT
துப்புரவு பணியாளர்கள் மத்தியில் தோன்றிய அமிதாப் பச்சன் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்தி திரையுலக மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மும்பை ஜூகுவில் உள்ள தனது ‘ஜல்சா’ பங்களாவில் ரசிகர்களை சந்தித்து வந்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வாராந்திர ரசிகர்கள் சந்திப்பை நிறுத்தினார். இந்தநிலையில், ஜல்சா பங்களா வீட்டு முன் துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது துப்புரவு பணியாளர்கள் முன் அமிதாப் பச்சன் தோன்றி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்த சந்திப்பின் போது, தெருவை சுத்தம் செய்யும் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
Tags:    

Similar News