சினிமா
அவர்களின் சேவை கடவுளுக்கு சமம் - வரலட்சுமி
உங்களுடைய சேவை கடவுளுக்குச் சமமானது. நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு உத்வேகம் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.
தற்போது காவல்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
"காவல்துறையினருக்கு மிகப்பெரிய நன்றி. இரவும் பகலுமாக எங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். யாரும் பார்க்கவில்லை என நினைக்காதீர்கள். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் பண்ணும் ஒவ்வொரு விஷயமும் எங்களுடைய நல்லதுக்குத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுடைய குடும்பத்தினரையும், உங்களுடைய உயிரையும் பாதுகாக்காமல் எங்களுடைய உயிரைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பெரிய நன்றி. உங்களுடைய சேவை கடவுளுக்குச் சமமானது. நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு உத்வேகம்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
"காவல்துறையினருக்கு மிகப்பெரிய நன்றி. இரவும் பகலுமாக எங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். யாரும் பார்க்கவில்லை என நினைக்காதீர்கள். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் பண்ணும் ஒவ்வொரு விஷயமும் எங்களுடைய நல்லதுக்குத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுடைய குடும்பத்தினரையும், உங்களுடைய உயிரையும் பாதுகாக்காமல் எங்களுடைய உயிரைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பெரிய நன்றி. உங்களுடைய சேவை கடவுளுக்குச் சமமானது. நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு உத்வேகம்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.