சினிமா
நடிகை இனியா

இந்த சூழலை கடந்து தான் ஆகவேண்டும் - இனியா

Published On 2020-05-11 19:27 IST   |   Update On 2020-05-11 19:27:00 IST
இந்தப் பாடத்தை நம்ம ஏத்துக்கிட்டு இந்தச் சூழலை கடந்துதான் வந்தாகணும் என்று நடிகை இனியா கூறியுள்ளார்.
ஊரடங்கு குறித்து நடிகை இனியா அளித்த பேட்டியில் கூறியதாவது: பள்ளிகளில் ஏப்ரல், மே மாதம் விடுமுறை விட்டால் ஒரு சந்தோஷம் இருக்கும்ல, அந்த மாதிரி இருக்கு. என்னோட பள்ளி நண்பர்கள் கூட அதிகம் பேசுறேன். இதெல்லாம் இந்த ஊரடங்கில் ரொம்ப ஜாலிதான். தவிர, எனக்கு கிளாசிக்கல் டான்ஸ் தெரியும். இந்தக் கடுமையான நேரத்துல கேரளா அரசாங்கம் எடுக்கிற முடிவுகள், அவங்களோட விதிமுறைகள் எல்லாம் நல்லா இருக்கு. சீக்கிரமே இந்தச் சூழல் மாறிடும்னு நம்பிக்கை தருது.

``என் வீடு திருவனந்தபுரத்துல இருக்கு. ஒரு நிகழ்ச்சிக்காக கொச்சின் வந்திருந்தேன். அப்பதான் ஒருநாள் ஊரடங்கு அறிவித்தார்கள். அதுக்குப் பிறகு, என்னால திருவனந்தபுரத்துக்கும் போக முடியாமல் சென்னைக்கும் வர முடியாமல் கொச்சின்ல மாட்டிக்கிட்டேன். அக்கா வீட்ல இருக்கேன். இந்த ஊரடங்கு எல்லோருக்கும் ஒரே மாதிரி இல்லை. நிறைய பேருக்கு இது ரொம்ப ரொம்ப சவாலான சூழல்.  

நம்ம இயற்கைக்கு என்ன செய்றோமோ அதைத்தான் இயற்கை நமக்கு திருப்பிக்கொடுக்கும். அப்படி நம்ம அனுபவிக்கிற காலம் இது. அதனால இந்தப் பாடத்தை நம்ம ஏத்துக்கிட்டு இந்தச் சூழலை கடந்துதான் வந்தாகணும்“ இவ்வாறு அவர் கூறினார்.

Similar News