சினிமா
ஊரடங்கை மீறி ஆண் நண்பருடன் ஹாயாக காரில் சுற்றிய கவர்ச்சி நடிகை கைது
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி காரில் சுற்றிய பிரபல கவர்ச்சி நடிகையை போலீசார் கைது செய்தனர்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. இவர், 2011-ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இவ்வாறு சுய விளம்பரத்திற்காக அவ்வப்போது எதாவது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில், தற்போது ஊரடங்கை மீறியதாக பூனம் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று அவர் தனது ஆண் நண்பருடன் மும்பை மெரைன் டிரைவ் சாலையில் சொகுசு காரில் சென்றுள்ளார். ஊரடங்கு சமயத்தில் காரணமின்றி பொதுவெளியில் சுற்றித்திரிந்த காரணத்தால் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவருடைய காரை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை எச்சரித்து விடுவித்தனர். மேலும் இவர்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.