சினிமா
நடிகர்கள் விஜய் சேதுபதி, கமல்

சிவாஜி பணத்தை தொட்டது கிடையாது - விஜய் சேதுபதியிடம் கூறிய கமல்

Published On 2020-05-02 07:37 GMT   |   Update On 2020-05-02 07:38 GMT
நடிகர் சிவாஜிகணேசன் பணத்தை தொட்டது கிடையாது என்று விஜய் சேதுபதியிடம் கமல் நேரலையில் கூறியுள்ளார்.
நடிகர் கமலும் விஜய் சேதுபதியும் இன்று சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் நேரலையில் பேசிக்கொண்டனர். அப்போது கமலின் சினிமா வாழ்க்கை பற்றிய பல விஷயங்களை விஜய்சேதுபதி கேட்டார்.

சிவாஜிக்கும் உங்களுக்கும் உள்ள அனுபவங்களைப் பற்றி விஜய் சேதுபதி கேட்டார், அதற்கு கமல் சிவாஜியிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். அவர் பயந்த சுபாவம் கொண்டவர். அவர் பணத்தை தொட்டது கிடையாது. சிவாஜி ஒரு படத்தின் படப்பிடிப்பில் நிறைய நாணயங்கள் கொட்டி வைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். அப்போது அவர் இதுதான் புது நாணயங்களா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

இதைப் பார்த்த பலரும் ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு நாணயம் எப்படி தெரியும் என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் உண்மையிலேயே அவர் பணத்தை அதிகம் பார்த்ததில்லை. நானே அட்வான்ஸ் கொடுத்து இருக்கிறேன். ஆனால் அவர் கையால் அதை வாங்கவில்லை.

ஒரு நாள் எப்படி வெளிநாட்டுக்கு செல்கிறார் என்று என்னிடம் கேட்டார். நான் டிக்கெட் எடுத்துக்கொண்டு விமானத்தில் செல்வேன் என்றேன். நீயே டிக்கெட் எடுத்து நீயே அந்த ஊருக்கு தனியாக சென்று விடுவாயா என்று கேட்டார். ஆமாம் என்றேன். என்னை தனியாக விமான நிலையத்தில் விட்டால் நான் அழுது விடுவேன் என்று அவர் சொன்னார். எனக்கு அந்த அளவுக்கு அந்த ஊருக்கெல்லாம் போக தெரியாது என்று சிவாஜி சொன்னதாக விஜய் சேதுபதியிடம் கமல் பகிர்ந்துகொண்டார்.
Tags:    

Similar News