சினிமா
டாக்டர்களுக்கு நிதி திரட்டும் வித்யாபாலன்
பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன், டாக்டர்களுக்கு பாதுகாப்புக் கவச உடைகள் வழங்க நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன். கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் சூழ்நிலையில் பல்வேறு சமூக பணிகளையும் செய்து வருகிறார். இப்போது மருத்துவர்கள் மற்றும் சுதாதார பணியாளர்கள் 3500 பேருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், கருவிகளை வழங்கி இருக்கிறார்.
பாதுகாப்பு கவச உடைகள் முக்கிமானது என்பதால் அதற்கான நிதி திரட்டும் பணியிலும் இறங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எங்கள் மருத்துவ ஊழியர்களுக்காக முழு உடல் பாதுகாப்பு கவசத்தை நன்கொடையாக அளித்து வருகிறேன், மேலும் இந்தியா முழுவதும் டாக்டர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும், உடனடியாக தேவைப்படும் முழு கவச உடைகளுக்காக நன்கொடை திரட்ட முடிவு செய்திருக்கிறேன் என்றார்.
பாதுகாப்பு கவச உடைகள் முக்கிமானது என்பதால் அதற்கான நிதி திரட்டும் பணியிலும் இறங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எங்கள் மருத்துவ ஊழியர்களுக்காக முழு உடல் பாதுகாப்பு கவசத்தை நன்கொடையாக அளித்து வருகிறேன், மேலும் இந்தியா முழுவதும் டாக்டர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும், உடனடியாக தேவைப்படும் முழு கவச உடைகளுக்காக நன்கொடை திரட்ட முடிவு செய்திருக்கிறேன் என்றார்.