சினிமா
ரஜினி, மணிகண்டன், விஜய் சேதுபதி

எளிய முறையில் திருமணம்.... விருந்துக்கான பணத்தை கொரோனா நிவாரணத்துக்கு வழங்கிய பேட்ட நடிகர்

Published On 2020-04-27 11:08 IST   |   Update On 2020-04-27 11:08:00 IST
பேட்ட படத்தில் நடித்த நடிகர் ஒருவர் கொரோனா ஊரடங்கு காரணமாக எளிய முறையில் திருமணம் செய்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி திருமணங்கள், இறுதி சடங்குகள் நடத்துவதற்கு சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தாலும் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்படவில்லை. மத்திய அரசின் கெடுபிடி காரணமாக மாநில அரசு ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்தது.

இந்நிலையில் எர்ணாகுளம் பனம்பள்ளி பகுதியை சேர்ந்த பிரபல மலையாள நடிகர் மணிகண்டனுக்கும், அஞ்சலி என்பவருக்கும் திருமணம் கடந்த 20-ந்தேதி நடந்தது. திருமண நிகழ்ச்சியில் ஊரடங்கு விதிமுறைப்படி 20 பேர் மட்டும் கலந்துகொண்டனர். திருமண விருந்து செலவுக்கு வைத்திருந்த பணத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு சிராஜ் எம்.எல்.ஏ.விடம் நடிகர் மணிகண்டன் வழங்கினார். 



கொரோனா பாதிப்பு ஊரடங்கு முடிவடைந்ததும் நடிகர்-நடிகைகளை அழைத்து விருந்து நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அவர் கூறினார். நடிகர் மணிகண்டன் ரஜினியின் பேட்ட, விஜய்சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News