சினிமா
சாய் பல்லவி

படத்தை பார்த்து எமோஷ்னல் ஆன சாய் பல்லவி

Published On 2020-04-24 10:12 GMT   |   Update On 2020-04-24 10:12 GMT
பிரேமம் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாய் பல்லவி, ஒரு படத்தை பார்த்து எமோஷ்னல் ஆகியிருப்பதாக கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு என்பதால் மக்கள் யாரும் வெளியில் வர முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் அனைவரும் டிவி, திரைப்படங்கள், வெப் சீரிஸ் என வீட்டிலேயே தங்கள் நேரத்திற்கு கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அவர் சில்லுக்கருப்பட்டி படத்தை அவர் பார்த்துள்ளார். அந்த படத்தை பார்த்துவிட்டு அதிகம் எமோஷ்னல் ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் படத்தை இயக்கிய ஹலிதா ஷமீமுக்கு இமெயிலில் வாழ்த்து கூறியுள்ளார் சாய் பல்லவி. அதில் அவர் கூறியிருப்பதாவது..

"ஹெலோ ஹலிதா.. படத்தை பார்த்துவிட்டு நானும் என் பெற்றோரும் அதிகம் எமோஷ்னல் ஆகிவிட்டோம். உங்களுக்காக நான் அதிகம் சந்தோஷப்படுகிறேன். இப்படி ஒரு உணர்வை எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி. நீங்க இது போன்ற பல ரத்தினங்களை உருவாக்க வேண்டும். எங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனை எப்போதும் உங்களுக்கு உண்டு" என கூறியுள்ளார் சாய் பல்லவி.
Tags:    

Similar News