சினிமா
விஜய்சேதுபதி

படம் ரிலீசாகும் முன்பே ரீமேக் உரிமையை கைப்பற்றிய விஜய்சேதுபதி

Published On 2020-04-23 05:30 GMT   |   Update On 2020-04-23 05:30 GMT
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, படம் ரிலீசாகும் முன்பே அதன் ரீமேக் உரிமையை கைப்பற்றி உள்ளார்.
விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் வில்லன் வேடம் ஏற்றார். இந்த படங்களுக்கு பிறகு அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகின்றன. 

தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அதேபோல் பிச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகும் உப்பென்னா என்ற தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்து இருக்கிறார். இதில் கதாநாயகனாக வைஷ்ணவ் தேஜ் நடித்துள்ளார். நாயகியாக கீர்த்தி ஷெட்டி வருகிறார். கதாநாயகிக்கு தந்தையாகவும், வில்லனாகவும் விஜய் சேதுபதி வருகிறார். இப்படம் கொரோனா ஊரடங்குக்கு பின் ரிலீசாக உள்ளது.



இந்நிலையில், இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்திலும் அவர் வில்லனாக நடிப்பாரா அல்லது தயாரிக்க மட்டும் உள்ளாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News