சினிமா
படமெடுக்க ரூ.400 கோடி.... கொரோனா நிதி இவ்வளவுதானா - விமர்சிக்கப்படும் தயாரிப்பாளரின் நன்கொடை
ரூ.400 கோடியில் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் நன்கொடை வழங்கியதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’(ரத்தம் ரணம் ரௌத்திரம்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 400 கோடியில் உருவாகி வருகிறது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்தாகி உள்ளது. இதனால் வேலை இழந்து தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு திரைப்பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர். குறிப்பாக தெலுங்கு திரை நட்சத்திரங்கள் கோடி கோடியாக நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது, ஆர்.ஆர்.ஆர் படத்தின் தயாரிப்பாளர் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். ரூ.400 கோடியில் படம் எடுத்தும் கொடுக்க மனமில்லையா என விமர்சிக்கின்றனர்.