சினிமா
ஒரே ஊரில் இருந்தும் பார்க்க முடியல - தனுஷ் சகோதரி உருக்கம்
ஒரே ஊரில் இருந்தும் குடும்பத்தினரை பார்க்க முடியவில்லை என தனுஷ் மற்றும் செல்வராகவனின் சகோதரி தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சத்தால் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திரைப்பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் தனுஷின் அக்கா கார்த்திகா தனது அண்ணன், தம்பி மற்றும் பெற்றோரை பார்க்க முடியாமல் தவிப்பதாக கூறியுள்ளார். அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: நான் அவர்களை மாதம் இருமுறையாவது சென்று பார்த்து விடுவேன். ஆனால் தற்போது ஒரே ஊரில் இருந்தும் அவர்களை பார்க்க முடியாமல் தவிக்கிறேன். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதை விட சிறந்தது உலகில் எதுவும் கிடையாது. அவர்களை ரெம்பவும் மிஸ் பண்றேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.