சினிமா
நடிகர் சங்கத்திற்கு அரிசி வழங்கிய யோகி பாபு
தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, நடிகர் சங்கத்திற்கு அரிசி வழங்கி உள்ளார்.
கொரோனா நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் அடைந்து உள்ளனர். வேலை செய்பவர்களும் வீட்டிலிருந்தே வேலை செய்கின்றனர்.
படப்பிடிப்பு நிறுத்தி வைக்கபட்டுள்ளதால், குறைந்தளவு சம்பளம் வாங்கும் நடிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்கத்திற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து பல நடிகர்களும் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் யோகிபாபு தற்போது 1250 கிலோ அரிசியை நடிகர் சங்கத்திற்கு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து பல நடிகர்களும் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் யோகிபாபு தற்போது 1250 கிலோ அரிசியை நடிகர் சங்கத்திற்கு வழங்கியுள்ளார்.