சினிமா
கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம்

கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ.50 லட்சம் நிதி

Published On 2020-04-09 11:58 GMT   |   Update On 2020-04-09 11:58 GMT
கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதியாக வழங்கி இருக்கிறார்கள்.
பேரழிவுகரமான கோவிட் -19 வைரஸ்  உலக அளவில் பெரும் நெருக்கடியை உருவாக்கியிருப்பதை  நாம் அறிவோம். சக குடிமக்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க, மக்களுக்கு உதவிட, கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் ஏற்கனவே (FEFSI) பெப்சிக்கு ரூ.15 லட்சம் வழங்கிய நிலையில், தற்போது தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கியிருக்கிறது.

முன்னதாக தமிழக அரசு, அதன் கோவிட் -19 பேரிடர் மேலாண்மை திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சியில் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு  வேண்டுகோள் விடுத்திருந்தது. 

கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம், இந்த நெருக்கடியான நேரத்தில் சக குடிமக்களின் துன்பங்களைத் தணிக்க,  தாராளமயமான பங்களிப்புகளைத் தந்து உதவுமாறும் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.
Tags:    

Similar News