சினிமா
ரஜினி

கொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை கொடுத்த ரஜினி

Published On 2020-04-08 12:34 GMT   |   Update On 2020-04-08 12:34 GMT
கொரோனா சிகிச்சைக்காக தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை அரசு விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரஜினி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பல்வேறு மருத்துவமனைகளில் தனியாக வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

மேலும், பல இடங்கள் சிகிச்சை அளிக்க தயாராகவும் உள்ளன. இந்நிலையில் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை ரஜினிகாந்தும், சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனது பொன்மணி மாளிகையை கவிஞர் வைரமுத்துவும் கொரோனா சிகிசைக்காக அரசு விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். 

ரஜினி தரப்பில் இதை உறுதி செய்துள்ளார்கள். 
Tags:    

Similar News