சினிமா
அனுஷ்கா

எதுவும் செய்ய முடியல - கொரோனா குறித்து அனுஷ்கா உருக்கம்

Published On 2020-04-08 07:05 GMT   |   Update On 2020-04-08 07:05 GMT
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, கொரோனா குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த கொடிய வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.  வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், நடிகை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: வாழ்க்கையில் நாம் கற்றுக்கொண்டதை எல்லாம் மறந்து, முற்றிலும் புதிதாக கற்றுக்கொண்டிருக்கிறோம். நாம் இதுவரை செய்ய முடியாது என்று நினைத்ததை எல்லாம் இப்பொழுது செய்துகொண்டிருக்கிறோம். நம்மால் முடிந்ததை இப்பொழுது செய்ய முடியாத நிலை.



நாம் காலத்தால் பிரிந்திருந்தாலும், புவியியல் ரீதியான தடையால் நாம் ஒன்றாக நிற்கிறோம். நமது பாதுகாப்புக்காக பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரும்போது எல்லோருக்கும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. சின்னதோ, பெரியதோ அந்த கதாபாத்திரத்தை மனிதனாக மனிதத்துடன் செய்வோம்'' என்று தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News