சினிமா
அமைதி காக்கும் சமந்தா.... காரணம் இதுவா?
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, கடந்த 10 நாட்களாக சமூக வலைத்தளங்களில் எதையும் பதிவிடாமல் உள்ளார்.
கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், திரைப்பிரபலங்களும் வீட்டில் முடங்கி உள்ளனர். இருப்பினும் சமூக வலைத்தளம் மூலம் தங்களது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது என இயங்கி வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா. கடந்த 10 நாட்களாக சமூக வலைத்தளங்களில் எதையும் பதிவிடாமல் இருப்பது திரையுலகினர் இடையே ஆச்சர்யத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சினிமா தொழிலாளர்களுக்கு பலர் நன்கொடை அளித்துவரும் சூழலில், அவர் எந்தவித நன்கொடையும் அறிவிக்கவில்லை. அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் அமைதி காத்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கள் பரவ ஆரம்பித்து விட்டன.
சமந்தாவை டுவிட்டரில் 79 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 95 லட்சம் பேரும் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.