சினிமா
இசையமைப்பாளர் சத்யா

கொரோனா விழிப்புணர்வு பாடலை உருவாக்கிய இசையமைப்பாளர் சத்யா

Published On 2020-04-07 15:40 IST   |   Update On 2020-04-07 15:40:00 IST
தமிழில் பல படங்களுக்கு இசை அமைத்து வரும் சத்யா கொரோனா விழிப்புணர்வு பாடலை உருவாக்கி உள்ளார்.
நெடுஞ்சாலை, எங்கேயும் எப்போதும், காஞ்சனா-2,  இவன் வேற மாதிரி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஒத்த செருப்பு போன்ற ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் சி.சத்யா. இவர் தற்போது கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார்.

'விழுத்திரு தனித்திரு வரும் நலனுக்காக நீ தனித்திரு...'  இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் பாடலை இன்ஜாமம் எழுதியுள்ளார். பின்னணி பாடகர்கள் சத்ய பிரகாஷ், சத்யன் மகாலிங்கம், அபி (கனடா), சுதர்சனன் அசோக்(அமெரிக்கா), கணேசன் மனோகரன், இன்ஜாமம் ஆகியோருடன் இசை அமைப்பாளர் சி.சத்யாவும் இணைந்து பாடியுள்ளார். 

சத்யா தற்போது எழில் இயக்கியுள்ள 'ஆயிரம் ஜென்மங்கள்', சுந்தர்.சி இயக்கும் 'அரண்மனை -3', 'ராங்கி' உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

Similar News