சினிமா
சல்மான்கான்

சினிமா தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் பணம் போட்ட சல்மான்கான்

Published On 2020-04-06 02:10 GMT   |   Update On 2020-04-06 02:10 GMT
கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து தவிக்கும் சினிமா தொழிலாளர்களின் வங்கி கணக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் பணம் போட்டு உதவியுள்ளார்.
கொரோனா ஊரடங்கால் சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவ தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் நிதி திரட்டப்படுகிறது. இந்தி நடிகர் சல்மான்கான் 25 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் பி.என்.திவாரி கூறும்போது, “எங்கள் அமைப்பில் மொத்தம் 5 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் கஷ்டத்தில் உள்ள 25 ஆயிரம் பேருக்கு உதவுவதாக சல்மான்கான் கூறி இருக்கிறார்” என்றார்.



அதன்படி முதல் கட்டமாக தான் நடித்து வந்த ‘ராதே’ படத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சல்மான்கான் உதவி வழங்கி இருக்கிறார். இந்த படத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார். இதில் திஷா பதானி நாயகியாக வருகிறார். ஷாக்கி ஷெராப், பரத் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த படத்தில் பணியாற்றிய லைட்பாய், அரங்கு அமைத்தவர்கள், கேமராமேன், உதவியாளர்கள், டிரைவர்கள், சமையல் தொழிலாளர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் சல்மான்கான் பணம் போட்டுள்ளார்.
Tags:    

Similar News