சினிமா
ஹரீஷ் கல்யாண்

படக்குழுவினருக்கு விருந்து கொடுத்த ஹரீஷ் கல்யாண்

Published On 2020-02-27 15:15 GMT   |   Update On 2020-02-27 15:06 GMT
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஹரீஷ் கல்யாண், தற்போது நடித்து வரும் படக்குழுவினருக்கு விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.
தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது ‘தாராள பிரபு’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதுபோல் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவு நாளை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். நாயகன் ஹரீஷ் கல்யாண், மொத்த படகுழுவிற்கும் வீட்டில் தயாரான பிரியாணியுடன் விருந்தளித்துள்ளார். இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.



இப்படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் இதன் பின்னணி வேலைகளை படக்குழுவினர் தொடங்க இருக்கிறார்கள்.
Tags:    

Similar News