சினிமா
சிம்பு

இந்தியன் 2 விபத்து எதிரொலி - சிம்பு பட தொழிலாளர்களுக்கு காப்பீடு

Published On 2020-02-25 12:23 GMT   |   Update On 2020-02-25 12:23 GMT
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து எதிரொலியாக சிம்பு நடிப்பில் உருவாகும் ‘மாநாடு’ பட தொழிலாளர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் பலியாயினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் ஷங்கர், கமல், காஜல் அகர்வால் நூலிழையில் தப்பித்தனர்.

இனிமேல் படப்பிடிப்புத் தளத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் காப்பீடு செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இதனை முதன் முதலாகச் செயல் வடிவத்தில் கொண்டு வந்துள்ளது ‘மாநாடு’ படக்குழு.



வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் 2 நாட்கள் முடிந்துள்ளது.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘இந்தியன் 2’ படப்பிடிப்புத் தள விபத்தை தொடர்ந்து, தனது ‘மாநாடு’ படப்பிடிப்புத் தளத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் காப்பீடு செய்துள்ளார். 30 கோடி ரூபாய் மதிப்புக்குக் காப்பீடு செய்துள்ளார். இதன் பிரீமியம் தொகை ஜிஎஸ்டி வரி சேர்த்து சுமார் 7.8 லட்ச ரூபாயாகும். ‘மாநாடு’ படக்குழுவினரின் இந்த முயற்சிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News