சினிமா
சுந்தர் சி

அரண்மனை 3 பட அப்டேட்

Published On 2020-02-23 10:42 GMT   |   Update On 2020-02-23 10:42 GMT
சுந்தர் சி இயக்கத்தில் உருவாக உள்ள அரண்மனை படத்தின் 3-ம் பாகம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார். 

இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்க உள்ளனர். காமெடி வேடங்களில் விவேக், யோகிபாபு ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு சத்யா இசையமைக்க உள்ளார்.



இந்நிலையில், அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளதாகவும், முதற்கட்டமாக குஜராத்தில் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குஜாரத்தில் ஒரு பிரம்மாண்ட அரண்மனையில் படப்பிடிப்பை நடத்த உள்ளார்களாம்.
Tags:    

Similar News