சினிமா
எனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் - பிரியா பவானி சங்கர் உருக்கம்
நடிகை பிரியா பவானி சங்கர் தனது காதலன் தனக்காக உயிரையும் கொடுப்பான் என சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டிவி சீரியலின் மூலம் பிரபலமானவர் பிரியா பவானி ஷங்கர். அதனை தொடர்ந்து அவருக்கு வெள்ளிதிரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது கூட இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பிரியாவிடம் அவரது காதலன் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: எந்த ஒரு பிரபல அந்தஸ்தும் இல்லாத நாளில் இருந்து எனக்கு அவரை தெரியும், அதுமட்டுமின்றி என்னை அப்பாவிற்கு பிறகு நன்றாக பார்த்துக்கொள்ள கூடியவர் அவர் தான். இன்னும் சொல்லப்போனால் அவர் எனக்காக தனது உயிரை கொடுக்கும் அளவுக்கு அன்பு செய்கிறார். மேலும் இந்த உறவை நான் உண்மையாகவே மதிக்கிறேன்’. இவ்வாறு அவர் உருக்கமாக பேசியுள்ளார்.