சினிமா
ரசிகரின் செல்பியால் கோபப்பட்ட சமந்தா
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருக்கும் சமந்தா, ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க வந்ததால் மிகவும் கோபப்பட்டிருக்கிறார்.
சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து வந்ததை தொடர்ந்து பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாத சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் கணவருடன் இணைந்தும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை சமந்தா ஜானு பட வெற்றிக்காக திருப்பதி கோவிலுக்கு படி வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பார்த்த தமிழ் ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
அதற்கு சமந்தா நடப்பது என்றால் ஒழுங்காக நட என்று கோபமாக கூறியுள்ளார். மேலும் இந்த இடத்தில் போட்டோ எடுக்குற வேலையெல்லாம் இங்கு வேண்டாம் என கடுமையாக கூறியுள்ளார்.