சினிமா
கொரோனா வைரசால் நாகார்ஜுனா படத்திற்கு வந்த சிக்கல்
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசால் தற்போது நாகார்ஜுனா படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ‘வைல்டு டாக்‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக சையாமி கெர் நடிக்கிறார். சாலமன் இயக்கும் இந்தப் படத்தில் நாகார்ஜுனா, தேசிய பாதுகாப்பு படை வீரராக வருகிறார். இதன் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது.
இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து காடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாய்லாந்திலும் கடுமையாகப் பரவி இருப்பதால் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளது.
இதுபற்றி கதாநாயகி சையாமி கெர் கூறும்போது, ‘இந்த படத்துக்காக கடந்த ஒரு மாதமாக தற்காப்புக் கலை பயிற்சி பெற்று வந்தேன். அதோடு தாய்லாந்தில் நடக்கும் ஷூட்டிங்கை ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக, படக்குழு ஷூட்டிங்கை தள்ளி வைத்துவிட்டது’ என்றார்.