சினிமா
குஷ்பு

அவரை பார்த்து பிரமித்து போனேன் - குஷ்பு

Published On 2020-02-06 15:21 GMT   |   Update On 2020-02-06 15:21 GMT
நான் சிரித்தால் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய குஷ்பு, அவரை பார்த்து பிரமித்து போனதாக தெரிவித்துள்ளார்.
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் சுந்தர். சி தயாரித்து இருக்கும் படம் நான் சிரித்தால். ஐஸ்வர்யா மேனன், கே. எஸ். ரவிக்குமார், சாரா, படவா கோபி, கதிர், "எரும சாணி" விஜய் போன்ற பலர் நடித்து இருக்கும் இந்த படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சுந்தர்.சி ஆதியை வைத்து தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. 

இதற்கு முன் மீசைய முறுக்கு மற்றும் நட்பே துணை ஆகிய படங்கள் இவரை வைத்து தயாரித்து உள்ளார். "கெக்க பெக்க" என்ற குறும்படத்தையே இவர்கள் சற்று மெருகேற்றி தற்போது திரைப்படமாக எடுத்து உள்ளனர். இப்படத்தை ராணா இயக்கி உள்ளார். 



படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குஷ்பு பேசியதாவது ‘இந்த படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை நான் படம் பார்க்கவில்லை. ஆதியைப் பார்க்கும்போது எனக்கு சுந்தர்.சி-யை பார்ப்பது போலவே இருக்கும். அவர்களுடைய விடாமுயற்சி, கடினஉழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றை பார்க்கும்போது நானும், ஆதியின் மனைவியும் பிரமித்துப் போகிறோம்.’ என்று கூறினார்.
Tags:    

Similar News