சினிமா
ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினியை இயக்கியது நிலவில் இறங்கியது போல் உள்ளது - முருகதாஸ்

Published On 2019-12-07 14:59 GMT   |   Update On 2019-12-07 14:59 GMT
தர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் முருகதாஸ், ரஜினியை இயக்கியது நிலவில் இறங்கியது போல் உள்ளது என தெரிவித்துள்ளார்.
சென்னை:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’.  இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 

தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இந்த பாடல் யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் இயக்குனர் முருகதாஸ் பேசியதாவது:

நான் ரஜினியின் சீனியர் ஃபேன்.

எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பார்கள். ஆனால் அவருக்கும் ரஜினிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எம்ஜிஆர், ரஜினி வித்தியாசமானவர்கள்.

தமிழ், இந்தி என அனைத்து நடிகர்களிடமும் ரஜினியின் சாயல் இருக்கும். தலைவர் ரசிகர்கள், என் ரசிகர்கள் கிடையாது. ஏனென்றால் நானே ரஜினி ரசிகன்.

நிலவை காட்டி சாப்பு ஊட்டுவார்கள். ஆனால், ரஜினியை இயக்கியது நிலவில் இறங்கியது போல் உள்ளது என தெரிவித்தார்.
Tags:    

Similar News