சினிமா
பாக்யராஜ்

பெண்கள் பற்றி சர்ச்சை பேச்சு.... பாக்யராஜுக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு

Published On 2019-12-03 07:14 GMT   |   Update On 2019-12-03 07:14 GMT
படவிழாவில் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில், இயக்குநர் பாக்யராஜுக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ், செல்போன் வந்த பின்னர் தான் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்தன. பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை சிலர் தவறாக பயன்படுத்திக் கொண்டனர். இந்த சம்பவத்திற்கு ஆண்கள் மட்டுமல்ல, அந்த பெண்களிடமும் தவறு இருக்கிறது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்பார்கள். ஆகவே, பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’ என கூறினார்.

பாலியல் பலாத்காரத்தில் பெண்கள் மீது குற்றம் சுமத்தியும், ஆண்களின் செயலை நியாயப்படுத்தும் வகையில் பாக்யராஜின் பேச்சு அமைந்ததாக பெண்கள் அமைப்புகள் சார்பில் எதிர்ப்புகள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து ஆந்திர மகளிர் ஆணையம் வழக்கு பதிவு செய்தது. தமிழக மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தது. இவ்வாறு பாக்யராஜுக்கு அடுத்தடுத்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தற்போது அவருக்கு ஆதரவாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் களமிறங்கியுள்ளது. 



அந்த சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”பெண்களைப் பற்றி பேசினாலே ஏதாவது வடிவில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என பலரும் ஓடி ஒதுங்கிக் கொள்ளும் இந்தச் சூழலில் தங்களின் துணிச்சலான சமுதாய நலன் சார்ந்த கருத்துகள் பாராட்டுக்குரியது" என்று சொல்லப்பட்டுள்ளது.
Tags:    

Similar News