சினிமா
கொடுத்த வாக்கை காப்பாற்றிய ஹிப்ஹாப் ஆதி
தமிழில் முன்னணி இசையமைப்பாளராகவும், கதாநாயகனாகவும் வலம் ஹிப்ஹாப் ஆதி, கொடுத்த வாக்கை காப்பாற்றி இருக்கிறார்.
முன்னணி இசையமைப்பாளராகவும், கதாநாயகனாகவும் வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவருடைய இசையில் சமீபத்தில் ஆக்ஷன் திரைப்படம் வெளியானது. சுந்தர்.சி இயக்கிய இப்படத்தில் விஷால் நாயகனாக நடித்திருந்தார்.
இவருடைய இசையில் சூப்பர் சிங்க ஜூனியர் புகழ் பூவையார் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பூவையாரின் பாடலை கேட்ட ஆதி, தன்னுடைய இசையில் ஒரு பாடலை பாட வைப்பேன் என்று வாக்கு கொடுத்திருந்தார். அந்த வாக்கை தற்போது நிறைவேற்றி இருக்கிறார்.
Big fan of this little guy here ❤️ I promised him, i’ll make a single with him & its done 😊 pic.twitter.com/UJhxTk43Ro
— Hiphop Tamizha (@hiphoptamizha) November 23, 2019
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் வெறித்தனம் பாடலில் பூவையார் சிறு வரிகளை பாடி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.