சினிமா
தினமும் துல்கர் சல்மான் வீட்டிற்கு செல்லும் நஸ்ரியா
நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நஸ்ரியா, தினமும் துல்கர் சல்மான் வீட்டிற்கு சென்று வருகிறார்.
நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நஸ்ரியா. திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார். நிறைய வாய்ப்புகள் வந்தபோதும் ஏற்காமல் இருந்தவர் நீண்ட நாட்களுக்கு பிறகு மலையாள படத்தில் ரீஎன்ட்ரி ஆனார்.
சமீபத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் தொடக்க விழா நடந்தது. இப்படத்தில் நஸ்ரியா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதை அவரே மறுத்துவிட்டார். திருமணத்துக்கு பிறகும் சுட்டித்தனம் குறையாமலிருக்கும் நஸ்ரியா தினமும் துல்கர் சல்மான் வீட்டுக்கு காலையில் சென்றுவிட்டு மாலையில் தான் திரும்பி வருகிறார். இந்த தகவலை துல்கர் சல்மானே வெளியிட்டுள்ளார்.
அவர் கூறும்போது, 'பிளே ஸ்கூலுக்கு குழந்தைகள் துள்ளிக்கொண்டு செல்வதுபோல் நஸ்ரியா தினமும் என் வீட்டுக்கு வந்துவிடுவார். கணவர் பகத் பாசிலே அவரை என் வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு மாலையில் வந்து அழைத்துச் செல்வார். அதற்கு காரணம் என்ன தெரியுமா? நஸ்ரியாவும் என் மனைவி அமல் சுபியாவும் நெருக்கமான தோழிகள். சினிமாவுக்கு சென்றாலும், பொருட்கள் வாங்க ஷாப்பிங் சென்றாலும் எப்போதும் ஒன்றாகத்தான் போவார்கள்' என்றார்.
துல்கர் சல்மான் பற்றி நடிகை நஸ்ரியா கூறும்போது, 'துல்கர் எனது அண்ணன் போன்றவர் அவரது மனைவி அமலும் நானும் நெருங்கிய தோழிகள். எங்குபோனாலும் ஒன்றாகத்தான் போவோம்' என்றார்.