சினிமா
ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன்

ஹீரோ படக்குழுவினரின் அடுத்த அறிவிப்பு

Published On 2019-11-25 13:18 GMT   |   Update On 2019-11-25 13:18 GMT
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘ஹீரோ’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஹீரோ’. மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளார்கள். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலை நவம்பர் 29ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



இப்படத்தின் பின்னணி வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News