சினிமா
ராஷ்மிகா

கவர்ச்சியாக நடித்ததால் ராஷ்மிகாவிற்கு வந்த பிரச்சனை

Published On 2019-11-25 10:46 GMT   |   Update On 2019-11-25 10:46 GMT
தெலுங்கு படம் மூலம் மிகவும் பிரபலமான ராஷ்மிகா, கவர்ச்சியாக நடித்ததால் தான் சில பிரச்சனைகளை சந்தித்திருப்பதாக கூறியிருக்கிறார்.
தெலுங்கில் பல படங்களில் நடித்த ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். மேலும் சில தமிழ் படங்களில் நடிக்க பேசி வருகிறார். சினிமாவில் தனது அனுபவம் குறித்து அவர் கூறியதாவது: நடிக்க வந்த புதிதில் சினிமா பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஷூட்டிங்கிற்கு வந்து நடித்துவிட்டு போனால் போதும் என்றே நினைத்திருந்தேன். 

ஆனால் அதையும் தாண்டி, ஒரு படத்தின் விளம்பரத்துக்காக மெனக்கெட வேண்டும் என்பதை போக போக தெரிந்துகொண்டேன். சினிமாவில் எந்த உயரத்தில் இருந்தாலும் படத்தின் புரமோஷனுக்காக இறங்கி வந்தே ஆக வேண்டும். மக்களிடம் ஒரு படம் செல்ல, நாம் மக்களிடம் பழக வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன். 



அதே சமயம், சினிமா துறைக்கு வெளியே நிறைய தர்மசங்கடமான சூழலை சந்தித்தேன். கிரிக் பார்ட்டி தெலுங்கு படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தேன். இதை பார்த்து அக்கம் பக்கத்து வீட்டினர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர். அது வெறும் நடிப்பு என்பதை அவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லை. சில நண்பர்கள், தோழிகளும் நான் சினிமாவுக்கு வந்ததால் என்னுடன் நட்பை முறித்துக்கொண்டனர். இது எனக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது’. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News