சினிமா
சந்தோஷ் நாராயணன், மாரி செல்வராஜ், தனுஷ்

மீண்டும் தனுஷூடன் இணைந்த சந்தோஷ் நாராயணன்

Published On 2019-09-30 03:11 GMT   |   Update On 2019-09-30 03:11 GMT
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.
நடிகர் தனுஷ் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள அசுரன் படம் வருகிற அக்டோபர் 4-ந் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் துரை செந்தில்குமார் இயக்கும் பட்டாஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக எடுத்து முடிக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார். இப்படத்தை தொடர்ந்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படம் தொடர்பாக விவாதிக்க மாரி செல்வராஜ் லண்டன் சென்றுள்ளார். 



இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த கொடி படத்திற்கு இசையமைத்திருந்தார். லண்டனில் மாரி செல்வராஜ், தனுஷுடன் சந்தோஷ் நாராயணன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News