சினிமா
கலைஞானம், ரஜினிகாந்த்

கொடுத்த வாக்கை காப்பாற்றிய ரஜினி...... தயாரிப்பாளருக்கு ரூ.1 கோடியில் வீடு பரிசு

Published On 2019-08-29 06:47 GMT   |   Update On 2019-08-29 06:47 GMT
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் கதாசிரியராகவும் விளங்கிய கலைஞானத்துக்கு, நடிகர் ரஜினிகாந்த் ரூ.1 கோடியில் வீடு வாங்கி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் கதாசிரியராகவும் விளங்கியவர் கலைஞானம். கலைஞானத்துக்கு சமீபத்தில் திரையுலகினர் பாராட்டு விழா நடத்தினர். அதில் பிரபலமான நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக ரஜினிகாந்த், சிவகுமார், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் சிவகுமார் பேசியபோது, கலைஞானம் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு சொந்த வீடு கட்டுவதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்’ என்று கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, ’அந்த வாய்ப்பை அரசுக்கு தரமாட்டேன். விரைவாக கலைஞானம் அவர்களுக்கு வீடு பாருங்கள். 10 நாட்களுக்குள் பணத்தை தருகிறேன்’ என்று கூறினார்.



இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்றை தேடிப்பிடித்ததகாவும், ரஜினி மொத்த பணத்தையும் அளித்து அந்த வீட்டை கலைஞானத்துக்கு பெற்று கொடுத்துள்ளதாகவும் தகவல் பரவியது. ஆனால் விசாரித்தால் வீடு தேடிக்கொண்டு இருப்பதாகவும் தகவல் வருகிறது. ரஜினி இந்த வீட்டுக்காக 1 கோடி ரூபாய் கூட கொடுக்க தயார் என்று கூறியதாகவும் சொல்கிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து கலைஞானம் கூறுகையில், ரஜினிக்கும் எனக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை. அவருடைய முதல் பட வாய்ப்பை நான் அளித்தேன். அவ்வளவுதான். ஆனா எனக்கு எவ்வளவு பெரிய உதவியை ரஜினி செய்துள்ளார். இது அவருடைய பரந்த மனதை வெளிப்படுத்துகின்றது, என்று பாராட்டினார்.

ஏற்கனவே ரஜினி நடித்து பெரிய வசூலை பெற்ற அருணாச்சலம் திரைப்படத்தில் தன் லாபத்தில் ஒரு பங்கை கலைஞானத்துக்கு அளித்து அவரது வாழ்வை சரிவிலிருந்து மீட்டார். அந்த படத்தில் வந்த லாபத்தை நலிவடைந்த 7 சினிமா பிரபலங்களுக்கு பிரித்து அளித்தார்.
Tags:    

Similar News