சினிமா

பெண்ணிடம் தகாத முறையில் பேசிய நடிகர் மீது வழக்குப் பதிவு

Published On 2019-06-15 08:24 GMT   |   Update On 2019-06-15 08:24 GMT
கேரளாவை சேர்ந்த நடிகர் வினாயகன், செல்போனில் இளம் பெண்ணிடம் தகாத முறையில் பேசியதாக கூறி 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திமிரு, சிலம்பாட்டம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் வினாயகன். தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். இவர், தமிழ், மலையாளம் உட்பட பல தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 

கேரளாவை சேர்ந்த இவர், மிருதுளாதேவி சசீதரன் என்ற இளம்பெண்ணிடம் செல்போனில் தகாத முறையில் பேசியதாக முகநூலில் அந்த பெண் பதிவு செய்துள்ளார். 



இதனையடுத்து அவரை கைது செய்யக்கோரி கேரளாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கல்பேட்டா போலீசார், வினாயகன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News