சினிமா

நெருக்கடியில் காஜல் அகர்வால்

Published On 2019-04-08 04:18 GMT   |   Update On 2019-04-08 04:18 GMT
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டியில், தனது நட்சத்திர அந்தஸ்தை தக்க வைக்க வேண்டிய நெருக்கடி தனக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். #KajalAggarwal
காஜல் அகர்வாலின் ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. கோமாளி படத்திலும் நடிக்கிறார். தெலுங்கில் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார். சினிமா வாழ்க்கை குறித்து காஜல் அகர்வால் கூறியதாவது:-

“தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பதில் தான் இப்போது ஆர்வமாக இருக்கிறேன். எனது சினிமா வாழ்க்கை இத்தனை காலமும் எந்த அதிருப்தியும் இல்லாமல் மகிழ்ச்சியாகவே கடந்துள்ளது. முதல் படத்தில் இருந்தே பெரிய இயக்குனர்கள் கதாநாயகர்கள் பார்வை என்மீது விழுந்தது. அவர்களுடன் பணியாற்றியதால் தான் இவ்வளவு உயர்ந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன். சினிமாவில் நம்மால் நிலையாக இருக்க முடியுமா என்ற பயம் எப்போதுமே ஏற்பட்டது இல்லை. அந்த அளவுக்கு தொடர்ந்து கைநிறைய படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

 

நல்லதோ கெட்டதோ நான் எடுத்த எல்லா முடிவுகளுமே நல்ல பலனைத்தான் கொடுத்தது. இது ஓடுமா? ஓடாதா? என்றெல்லாம் யோசிக்காமல் சொன்ன உடனே ஒப்புக்கொண்டேன். அதுகூட என்னை பெரிய இடத்தில்தான் கொண்டுபோய் வைத்தது. இந்த நட்சத்திர அந்தஸ்தை தக்க வைக்க வேண்டிய நெருக்கடி இப்போது எனக்கு அதிகமாகி இருக்கிறது. நெருக்கடியை எதிர்கொள்ளும் தைரியமும் எனக்கு இருக்கிறது.” இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார். #KajalAggarwal

Tags:    

Similar News