சினிமா
கோப்பு படம்

மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்

Published On 2019-01-08 05:47 GMT   |   Update On 2019-01-08 05:47 GMT
ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யாவின் மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் தரிசனம் செய்தனர். #SoundaryaRajinikanth
நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை முதலில் திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். சமீபத்தில் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றனர்.

இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த தொழில்அதிபரின் மகனை சவுந்தர்யா மறுமணம் செய்ய உள்ளார். எளிமையான முறையில் கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

சவுந்தர்யா தன் தாய் லதா ரஜினிகாந்த்துடன் நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். இவர்களுடன், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என 20 பேர் சென்றனர். திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அவர்கள் இரவு தங்கி ஓய்வு எடுத்தனர்.



நேற்று காலை சிறப்பு தரிசனத்தில் சுவாமி ஏழுமலையானை, சவுந்தர்யா, லதா தரிசனம் செய்தனர்.

திருமண அழைப்பிதழை ஏழுமலையானின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜை செய்து பின்னர் பெற்றுக் கொண்டனர். லதா ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்குத் தீர்த்த பிரசாதம் வழங்கினர். #SoundaryaRajinikanth

Tags:    

Similar News