சினிமா

அக்‌ஷரா ஹாசனின் ஆபாச படங்களை வெளியிட்டது முன்னாள் காதலரா? மும்பை போலீஸ் விசாரணை

Published On 2018-11-17 13:14 GMT   |   Update On 2018-11-17 13:14 GMT
அக்‌ஷரா ஹாசனின் ஆபாச படங்களை வெளியிட்டது அவரது முன்னாள் காதலரும், நடிகை ரதியின் மகனுமான தனுஜ் விர்வானியா என்பது குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். #AksharaHaasan #TanujVirwani
கமல்ஹாசனின் இளைய மகளும் நடிகையுமான அக்‌‌ஷரா ஹாசனின் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த படங்கள் யாரால் வெளியிடப்பட்டன என்று கேள்விகள் எழுந்தன.

இந்த விவகாரம் குறித்து அக்‌‌ஷரா ஹாசன் மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் ‘அந்த படங்கள் ஒரு படத்திற்கான போட்டோ ஷூட்டுக்காக எடுக்கப்பட்டது. யார் கசியவிட்டது என்பதை கண்டறிந்து தண்டிக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

அக்‌‌ஷராவின் நண்பரும், நடிகருமான தனுஜ் வெளியிட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

1980-களில் கமலுடன் உல்லாசப் பறவைகள், ரஜினியுடன் முரட்டு காளை போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ரதி. இவரது மகனும், நடிகருமான தனுஜ் விர்வானியை, அக்‌‌ஷரா காதலித்து வந்தார். கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டார்கள். தற்போது வெளியான புகைப்படங்கள், அக்‌‌ஷரா 5 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய ஐ போனில் எடுக்கப்பட்டவை.



அக்‌‌ஷரா தன்னுடைய படங்களை 2013-ம் ஆண்டு தனுஜிடம் பகிர்ந்துள்ளார். இதனால் சமீபத்தில் வெளியான அக்‌‌ஷராவின் தனிப்பட்ட புகைப்படங்கள் தனுஜால் கசியவிடப்பட்டதா என்கிற கோணத்தில் மும்பை காவல்துறை விசாரணை செய்து வருவதாகவும் இதுகுறித்து தனுஜை விசாரணை செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் அக்‌‌ஷராவின் புகைப்படங்களை தான் கசியவிடவில்லை என தனுஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவருடைய செய்தித்தொடர்பாளர் அளித்துள்ள பேட்டி:-

“இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். அக்‌‌ஷரா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பல வருடங்கள் அக்‌‌ஷராவும், தனுஜும் டேட்டிங் செய்தார்கள். ஆனால் தற்போது அவர்கள் ஒன்றாக இல்லை. எனினும் அவர்கள் நண்பர்களாக நீடிக்கிறார்கள். அவர்கள் இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இரு நாட்களுக்கு முன்புகூட கிண்டலாகப் பேசிக்கொண்டார்கள்.



அவர்களுடைய உரையாடல்களை தனுஜ் வைத்துள்ளார். தேவைப்பட்டால் அதையும் வெளியிடுவோம். நட்பு ரீதியில் அவர்கள் செய்துகொண்ட கிண்டல், அவர்களுடைய பிரிவினால் நட்பு மோசமடையவில்லை என்பதைக் காட்டுகிறது. அவர்கள் இன்னமும் நண்பர்களாகத்தான் உள்ளார்கள்.

ஒருவேளை தனுஜை, அக்‌‌ஷரா குற்றம்சாட்ட வேண்டுமென்றால் அவர் பல மாதங்களாக தனுஜிடம் பேசிக் கொண்டிருக்க மாட்டார். அவர்கள் பிரிந்து கிட்டத்தட்ட ஒரு வருடமாகிறது. அக்‌‌ஷரா எதிர்கொண்ட இந்தப் பிரச்சினையை தனுஜ் நன்கு அறிவார். காவல்துறையின் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க தனுஜ் தயாராக உள்ளார். குற்றம் செய்தவர் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும்”

இவ்வாறு அவர் கூறினார். #AksharaHaasan #TanujVirwani

Tags:    

Similar News