சினிமா

இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி

Published On 2018-09-16 11:09 GMT   |   Update On 2018-09-16 11:09 GMT
இணைய தொடரில் நடித்து மிகவும் பிரபலமான கியாரா அத்வானி, இனிமேல் சினிமாவில் மட்டும்தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். #KiaraAdvani
விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தில் இந்தி நடிகை கியாரா அத்வானியை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கியாரா நடித்த இணைய தொடர் ஒன்று சர்ச்சையானது. பாலியல் தேவைகள், அதில் உள்ள முரண்பாடுகள் குறித்து உருவான அந்தப் படத்தில் கரண் ஜோஹர் இயக்கிய அத்தியாயத்தில் கியாரா அத்வானி நடித்திருந்தார். 

அந்த படத்தில் அவரது நடிப்பு, பாராட்டுகளைப் பெற்றதுடன் சர்ச்சைகளையும் சந்தித்தது. “இது போன்று நடந்துவிடக்கூடாது என்பதற்காக தான் இணைய தொடர்களில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன். ஒருவேளை லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தை கரன் ஜோகர் இயக்கவில்லை என்றால் நான் நடித்திருப்பது சந்தேகமே. 



தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வந்தாலும் நான் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பேன். இனி இணைய தொடர் பக்கம் செல்ல விருப்பம் இல்லை’’ என்று கூறி இருக்கிறார்.
Tags:    

Similar News