சினிமா

அடுத்த படத்திற்கு தயாரான சந்தோஷ் ஜெயக்குமார்

Published On 2018-09-04 14:46 GMT   |   Update On 2018-09-04 14:46 GMT
ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் ஆகிய படங்களை தொடர்ந்து, புதிய படத்திற்கு சந்தோஷ் ஜெயக்குமார் தயாராகி இருக்கிறார். #SanthoshJayakumar
ஹரஹர மஹாதேவகி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அடல்ட் காமெடியுடன் வெளியான இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதில் கவுதம் கார்த்திக் நாயகனாகவும், நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.

இப்படத்தை தொடர்ந்து, மீண்டும் கவுதம் கார்த்திக்கை வைத்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ அடல்ட் ஹாரர் படத்தை இயக்கினார். இதே நேரத்தில் ஆர்யாவை வைத்து ‘கஜினிகாந்த்’ என்ற காமெடி படத்தையும் இயக்கினார். இவ்விரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.



தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார். இவரின் அடுத்த படத்தையும் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். விரைவில் இப்படம் பற்றிய முழு விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
Tags:    

Similar News