சினிமா
பூஜையுடன் துவங்கிய காற்றின் மொழி படப்பிடிப்பு
ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகும் `காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. #KaatrinMozhi #Jyothika
ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளியான `நாச்சியார்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.
இந்த நிலையில், ஜோதிகாவின் அடுத்த படமான காற்றின் மொழி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியிருக்கிறது. பூஜையில் நடிகர் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா, ராதாமோகன், எம்.எஸ்.பாஸ்கர், தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நடிகர் சிவக்குமார் கிளாப்போர்டை அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
ராதா மோகன் இயக்கும் இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார். படப்பிடிப்பை ஒரு மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது, படம் வருகிற அக்டோபரில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `தும்ஹரி சூளு' படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. #KaatrinMozhi #Jyothika