சினிமா

பாஸ்கர் ஒரு ராஸ்கல் வேலைகளை முடித்தார் அரவிந்த் சாமி

Published On 2017-08-31 12:18 GMT   |   Update On 2017-08-31 12:18 GMT
சித்திக் இயக்கத்தில் உருவாகி வரும் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்' படத்தில், தான் சம்மந்தப்பட்ட காட்சிகளை முடித்துள்ளார் அரவிந்த்சாமி.
அரவிந்த்சாமி தற்போது `சதுரங்கவேட்டை 2', `வணங்காமுடி', `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் `நரகாசூரன்' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.    

இதில் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தை சித்திக் இயக்குகிறார். அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இவர்களுடன் `தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் நிகிஷா பட்டேலும் நடித்திருக்கிறார்.


இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது அரவிந்த்சாமி சம்மந்தப்பட்ட காட்சிகளை முடித்துள்ளார். இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமுள்ளது. இது குறித்து அரவிந்த் சாமி கூறும்போது, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் என்னுடைய காட்சிகள் அனைத்தையும் முடித்து விட்டேன். இன்னும் ஒரு பாடல் மட்டும் மீதமுள்ளது. இப்படம் சிறந்த பொழுதுபோக்கு படமாக வந்திருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி’ என்று கூறியிருக்கிறார்.
Tags:    

Similar News