ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி

புதிய தலைமுறை ஆல்டோ வெளியீட்டு விவரம்

Published On 2021-09-27 10:46 GMT   |   Update On 2021-09-27 10:46 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை ஆல்டோ மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை ஆல்டோ மாடல் ஜனவரி 2022 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்பதாவது தலைமுறை ஆல்டோ மாடலில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

புதிய ஆல்டோ மாடல் மேம்பட்ட ஹார்டெக்ட் பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. இதே பிளாட்பார்மில் பல்வேறு மாடல்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. 3 சிலிண்டர் என்ஜின் புதிதாக உருவாக்கப்பட்டு இருந்தாலும், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட என்ஜின் அதிக மைலேஜ் வழங்கும். 



பல்வேறு மாற்றங்களுடன் உருவாகி இருக்கும் ஆல்டோ மாடல் முதற்கட்டமாக ஜப்பானில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதன் விலை கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.  

இந்தியாவில் வெளியாக இருக்கும் மூன்றாம் தலைமுறை ஆல்டோ மாடல் ஹார்டெக்ட் கே பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என்றும் இதில் முற்றிலும் புதிய 800 சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News