ஆட்டோமொபைல்
ஹூண்டாய் தானியங்கி கார் வெளியீட்டு விவரம்
தானியங்கி டாக்சிக்களை உருவாக்க ஹூண்டாய் நிறுவனம் இரு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.
ஹூண்டாய் ஐயோனிக் 5 சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எதிர்காலத்தில் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் தானியங்கி டாக்சி வாகனமாக வீதிகளில் வலம்வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹூண்டாய், ஆப்டிவ் மற்றும் மோஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தானியங்கி ரோபோ டாக்சியை உருவாக்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் தானியங்கி டாக்சிக்கள் 2023 வாக்கில் சாலைகளில் எதிர்பார்க்க முடியும்.
தானியங்கி டாக்சிக்கள், முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்டு உருவாகி இருக்கும் ஐயோனிக் 5 மாடலை தழுவி எஸ்.ஏ.ஐ. லெவல் 4 ஆட்டோனோமஸ் வெஹிகில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது. பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த தானியங்கி வாகனத்தில் பல்வேறு சென்சார்கள், ரிமோட் வெஹிகில் அசிஸ்டன்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன.