ஆட்டோமொபைல்
பறக்கும் வாகனம்

விரைவில் பயன்பாட்டிற்கு வரும் பறக்கும் டாக்சி

Published On 2021-05-20 07:48 GMT   |   Update On 2021-05-20 07:48 GMT
எலெக்ட்ரிக் திறன் கொண்ட பறக்கும் வாகனங்களில் பொது மக்களுக்கு டாக்சி சேவை துவங்கப்பட இருக்கிறது.

எலெக்ட்ரிக் திறன் கொண்ட பறக்கும் டாக்சிக்கள் 2024 அல்லது 2025 வாக்கில் ஐரோப்பாவில் பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த தகவலை ஐரோப்பாவுக்கான வான்வெளி பாதுகாப்பு ஆணையர் தெரிவித்து இருக்கிறார். 

இந்த பறக்கும் வாகனங்கள் செங்குத்தாக (Vertical Take Off) வான்வெளிக்கு கிளம்பும் திறன் கொண்டிருக்கும். இவற்றை வர்த்தக ரீதியில் பயன்படுத்தலாம் என ஐரோப்பிய யூனியனுக்கான வான்வெளி பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பேட்ரிக் கி தெரிவித்தார்.



தானியங்கி முறையில் செயல்படும் டிரோன்கள் பயன்பாட்டிற்கு வர மேலும் ஐந்து ஆண்டுகள் கூடதலாக ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார். ஐரோப்பிய யூனியனுக்கான வான்வெளி பாதுகாப்பு நிறுவனம் பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து இதனை சாத்தியப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 
Tags:    

Similar News