ஆட்டோமொபைல்
2021 ஸ்கோடா கோடியக்

2021 ஸ்கோடா கோடியக் வரைபடங்கள் வெளியீடு

Published On 2021-03-31 09:29 GMT   |   Update On 2021-03-31 09:29 GMT
ஸ்கோடா நிறுவனம் தனது புதிய கார் வரைபடங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ஸ்கோடா நிறுவனம் தனது 2021 கோடியக் பேஸ்லிப்ட் மாடலை ஏப்ரல் 13, 2021 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது புதிய கார் வரைபடங்களை ஸ்கோடா வெளியிட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடலாக கோடியக் இருக்கிறது.



இந்தியாவில் ஸ்கோடா கோடியக் மாடல் 2017 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய மாடலின் முன்புறம், பின்புறங்களில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் வயர்லெஸ் சா்ஜிங் மற்றும் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் என புது அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. 

புதிய கோடியக் மாடலிலும் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும். இதுவரை இந்த பிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் உலகம் முழுக்க 60 நாடுகளில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.
Tags:    

Similar News