ஆட்டோமொபைல்
2021 மஹிந்திரா எக்ஸ்யுவி300 புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்
2021 மஹிந்திரா எக்ஸ்யுவி300 புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் தனது பிரபல காம்பேக்ட் எஸ்யுவி மாடலான எக்ஸ்யுவி300 பெட்ரோல் ஆட்டோஷிப்ட் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஆட்டோஷிப்ட் வசதி எக்ஸ்யுவி300 டாப் எண்ட் டபிள்யூ8 (ஒ) வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.
புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி300 பெட்ரோல் ஆட்டோஷிப்ட் வேரியண்ட் விலை ரூ. 9.95 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டாப் எண்ட் வேரியண்ட் டூயல்-டோன் ரெட் மற்றும் அக்வா-மரைன் நிறங்களில் கிடைக்கிறது. பேஸ் வேரியண்ட் புதிதாக கேலக்ஸி கிரே நிறத்தில் கிடைக்கிறது.
ஆட்டோஷிப்ட் மற்றும் புதிய நிறம் தவிர எக்ஸ்யுவி300 டபிள்யூ8 (ஒ) வேரியண்ட் மஹிந்திராவின் புதிய புளூசென்ஸ் பிளஸ் கனெக்டெட் தொழில்நுட்ப வசதியை பெறுகிறது. புதிய கனெக்டெட் தொழில்நுட்பத்தில் 40-க்கும் அதிக வசதிகளை கொண்டுள்ளது.
இதில் லொகேஷன் சார்ந்த வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள், ரிமோட் வெஹிகில் கண்ட்ரோல் மற்றும் இதர இன்போடெயின்மென்ட் கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன. புதிய எக்ஸ்யுவி300 தற்சமயம் இசிம் வசதியை கொண்டுள்ளது. இது செயலி மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைந்து செயல்படுகிறது.