ஆட்டோமொபைல்
ஸ்கோடா பேபியா

புதிய ஸ்கோடா பேபியா வெளியீட்டு விவரம்

Published On 2020-10-07 11:01 GMT   |   Update On 2020-10-07 11:01 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய பேபியா மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் முதல் தலைமுறை பேபியா மாடலை 2008 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்திற்கு பெரும் வெற்றியை பெற்று தந்தது. தொடர் வெற்றி காரணமாக அந்நிறுவனம் இந்த காருக்கு பல்வேறு அப்டேட்கள் மற்றும் பேஸ்லிப்ட் வெர்ஷன்களை அறிமுகம் செய்தது. 

சமீப காலங்களில் இதன் விற்பனை சரிய ஆரம்பித்ததும், ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் பேபியா மாடலை திரும்பப் பெற்றது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஸ்கோடா பேபியா நான்காம் தலைமுறை மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 



பின் இதன் விற்பனை முதற்கட்டமாக ஐரோப்பிய சந்தையில் துவங்கி பின் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்கோடா மாடலில் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதேபோன்ற சிஸ்டம் ஆக்டேவியா மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆக்டேவியா மாடலில் 1.0 லிட்டர் டிடிஐ இவோ இ-டெக் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 108 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

Tags:    

Similar News